தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளது என்றும் வாக்கு இயந்திரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட ஜெகன், நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும் என்றார்.