பழனி ஒன்றியம் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

பழனி, ஜூன் 18- பழனி கழக மாவட்டம் பழனி ஒன்றிய கழகம் சார்பில் பாலசமுத்திரம் பேரூராட்சி கலையரங்கில் 16.6.2024 அன்று மாலை 7 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பழனி ஒன்றியத் தலைவர் சி.இராதா கிருஷ்ணன் தலைமை ஏற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.பாலமுருகன் அனை வரையும் வரவேற்றார். பழனி நகரச் செயலாளர் மு.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பழனி ப.க. தலைவர் ச.திராவிடச்செல்வன் தொடக்கவுரை யாற்றினார். கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

ஒன்றியத் தலைவர் சி.இராதாகிருஷ்ணன், அழகர் சாமி, ச.பால சுப்பிரமணி, விக்ரம் தமிழ்ச்செல்வன், இரணி யன், குண.அறிவழகன், சித்தன், மு.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கண்டனர். பொதுமக்கள் திரளாக கலந்து கண்டு உரையை கேட்னர். ச.பாலசுப்பிரமணியன் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *