கோயில் பணம், நகை முறைகேடு புகாரளித்தவருக்கு அச்சுறுத்தலா?

1 Min Read

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு

சென்னை, ஜூன் 17- மேனாள் அறங்காவலருக்கு மிரட்டல் விடுத்த புகாரில் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2002 முதல் 2009 வரை சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் அறங்காவலராக இருந்தவர் விஸ்வநாதன்.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நபர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் அளிக்கும் நகைகள், பணத்தை காளிதாஸ், எடுத்துச் செல்வதாக புதிய நிர்வாகத்திடம் விஸ்வநாதன் புகார் அளித்தார்.

விஸ்வநாதன், காளிதாஸ் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தாக்கியதாக கூறப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பின் தொடர்ந்து வந்த நபர்கள் வழி மறித்து மிரட்டல் விடுத்தனர் என விஸ்வநாதன் குற்றம் சாட்டினார். இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *