பெரியார். அண்ணா. கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு கொரட்டூர்,தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 15-06-2024 அன்று மாலை 7 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில். அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம் முன்னிலையில். பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன். கலைஞர் 100. விடுதலை 90. நமது வெற்றி 40/40 முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. தேவேந்திரகுமார் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வழக்குரைஞர் ஜெ.ராஜா ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன்,ஆறுமுகம், கருப்பசாமி, ஹரிதாஸ், மணி சுமதி, சொக்கம்மாள், பிச்சை மணி, உதயசூரியா, கெஜலட்சுமி, சிவகுமார், ஜெயந்தி, செல்வகுமார், விஜய பானு, புஷ்பா, அருள் விழியன், ஆரோக்கியதாஸ், சுரேஷ், தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக வழக்குரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
பெரியார். அண்ணா. கலைஞர். பகுத்தறிவு பாசறையின் 425ஆவது வார நிகழ்வு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books