காரைக்காலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

1 Min Read

அரசியல்

காரைக்கால், ஆக. 28- காரைக்கால் மாவட்டம், காரைக்கால் சுவாதி மஹாலில் நேற்று (27.08.2023) 35 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் உரையாற்றினார். மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமை யேற்று உரையாற்றினார்.

அரசியல்

பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர் மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ் மாவட்ட காப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். கழகசொற்பொழிவாளர்  வழக்குரைஞர் பூவை.புலிகேசி Ôதந்தை பெரியார் ஒர் அறிமுகம்Õ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். பேராசிரியர் நம். சீனிவாசன் Ôதமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள்Õ என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.  திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் Ôபார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள்Õ என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *