Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: ‘நீட்’டை ஒழிப்போம் – நீதியை நிலைநாட்டுவோம்! 18ஆம் தேதி மாலை சென்னையில் கூடுவீர்! கூடுவீர்!! – கருஞ்சட்டை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
கழகம்

‘நீட்’டை ஒழிப்போம் – நீதியை நிலைநாட்டுவோம்! 18ஆம் தேதி மாலை சென்னையில் கூடுவீர்! கூடுவீர்!! – கருஞ்சட்டை

Last updated: June 16, 2024 3:26 pm
Published: June 16, 2024
SHARE

அருமைப் பார்ப்பனர் அல்லாத தோழர்களே! பட்டியலின சகோதரர்களே, பிற்படுத்தப்பட்ட உடன் பிறப்புகளே! சிறுபான்மையினரே!
ஒரு காலகட்டம் இருந்தது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் நம்மை மண்டியிடச் செய்தது! கல்வி தானே விழி – அதை அழித்துவிட்டால் நாம் முடங்க வேண்டியதுதானே!
ஏதோ வெள்ளைக்காரன் கல்வி வாசலைத் திறந்து விட்டான். பார்ப்பனர்களுக்கு அது தான் கோபம்! மற்றபடி சுதந்திரப் போராட்ட மும் அல்ல – மண்ணாங்கட்டியும் அல்ல.

இதனை மகாராட்டிரத்தில் தோன்றிய ஜோதி பாபுலேயும் கூறி இருக்கிறார்.
இந்தியத் துணைக் கண்டத்திலே தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் உதித்த நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் – தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகளால் கல்விக் கண் திறக்கப்பட்டது.

காமராசர் காங்கிரசுகாரர். ஆனாலும், அவரைக் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று சாடியது பார்ப்பனர் கூட்டம். இவற்றுக்கெல்லாம் அடிப்படை மூலகர்த்தா தந்தை பெரியார்!

1952இல் ஆட்சிக்கு வந்தபோதுகூட ஆச்சாரியார் (ராஜாஜி) அரை நேரம் படித்தால் போதும் – அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வரவில்லையா? அத்தோடு விடவும் இல்லை; 6,000 பள்ளிகளை இழுத்து மூடவில்லையா?
தந்தை பெரியார் தலைமையில் தமிழ்ப் பூமியே பூகம்பமாய்க் கிளம்பி, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, குல்லூகபட்டராம் ஆச்சாரியாரையே பதவியை விட்டு விரட்ட வில்லையா? அத்தோடு அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகவில்லையா?
போராடிப் போராடி ஒவ்வொரு அங்குலமாகக் கல்வியில் முன்னேறி வந்தோம். இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு – கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாட்டில்.

Also read

திராவிடர் கழகம்
துண்டு அறிக்கையா? மதக் கலவரத்தைத் தூண்டும் அறிக்கையா?
பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

கல்வியிலும் உத்தியோகங்களிலும் பார்ப்பனர் அல்லாதார் தலை தூக்க ஆரம்பித்து விட்டனரே – பொறுக்குமா ஆரியக் கூட்டத்துக்கு?
நேரிடையாக ஒழிக்க முடியாது – மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்ற நிலையில் நம் கல்விப் பாதையில் கண்ணி வெடிகளைப் புதைத்து விட்டார்கள்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, நஞ்சு கலந்த முள் வேலியை வைத்தவர்கள் ஆயிற்றே! இப்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருப்பது அரசியல் அதிகாரம். அவர்களுடைய கவனமெல்லாம் சமூக நீதிக்கு எப்படி சவக்குழி வெட்டுவது என்பதுதான்.
அதுததான் ‘நீட்’. அதுதான் EWS.

+2 வரை படித்து, மதிப்பெண் பெற்று டாக்டர் ஆனவர்கள் எல்லாம் டாக்டர் இல்லையாம்! அதற்கு மேலும் ஒரு ‘தகுதி’ தேர்வாம். அதுதான் ‘நீட்’. அது வேறு எதற்கும் அல்ல- நம்மை நீட்டாக ஒழிப்பதற்கே!

ஒரு தகவலைத் தெரிவித்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
2016-2017 நீட் வருவதற்கு முன் +2 மதிப்பெண் அடிப்படையில் மரு்ததுவக் கல்லூரியில் திறந்த போட்டியில் 884 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 259, தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 23, பழங்குடியினருக்கு ஒரு இடம், அருந்ததியருக்கு 2 இடங்கள், முஸ்லிம்களுக்கு 32 இடங்கள், உயர்ஜாதி யினருக்குக் கிடைத்தவை 68 இடங்கள்.
(200க்கு 200 இடங்கள் 8இல் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏழு இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஓர் இடமும் கிடைத்தன. உயர்ஜாதியினருக்குப் பூஜ்ஜியம்.)

நீட் வந்த பின் – எல்லாம் பழங்கதையாய் பட்டுப் போயின. சி.பி.எஸ்.இ. முறையில் ‘நீட்’ வந்ததால் 20 மடங்கு அதிக இடங்களைக் கைப்பற்றினர். இதுதான் நிலைமை! இதனை நீடிக்க விடலாமா? நீடிக்க விட்டால் நிலைமை என்னவாகும்?
அனிதாக்கள் சாக வேண்டியதுதான்! மீண்டும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக்கள்தான் டாக்டர்கள்!
வெளிநாடு சென்று படிக்கலாம் என்றிருந்தது. இப்பொழுது அதற்கும் ‘ஆப்பு’ வைக்கிறார்கள். அதற்கும் ‘நீட்’ போன்ற ஒரு தேர்வாம்!
97 விழுக்காடு மக்களின் வாழ்வோடு மூன்று விழுக்காட்டினர் மோதுகிறார்கள் என்றால், என்ன பொருள்? இன்னும் நாம் சோம்பல் முறித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்! குறட்டை விடுகிறோம் என்ற நிலைமை!

போதும் போதாதற்கு ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற நவீன குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கிறது ஒன்றிய மோடி தலைமையிலான அரசு.
கோட்டை விடப் போகிறோமா? இல்லை, ஏற்கெனவே நாம் பெற்று வந்த உரிமைகளை மீட்கப் போகிறோமா?
இந்தியத் துணைக் கண்டத்திற்கே சமூக நீதிக்கு வழிகாட்டும் மாநிலம் தந்தை பெரியார் பிறந்த திராவிட தமிழ் மண் அல்லவா!
சமூக நீதிப் போரில் பல விலைகளைக் கொடுத்துக் கொடுத்து இறுதி வெற்றிச் சிரிப்பை ஈட்டியவர்கள் நாம்!
இந்த முறையும் வெல்லுவோம்! நீட்டை எதிர்த்து இப்பொழுது இந்தியா முழுவதும் போராட்டத் தீ கொழுந்து விட ஆரம்பித்துவிட்டது தந்தை பெரியார் உருவத்தைப் பதாகையாக தூக்கிப் பிடித்து போர் முழக்கம் செய்து வருகின்றன!

தமிழ்நாட்டிலும் பல்வேறு அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
வரும் 18அம் தேதி செவ்வாய் மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட மாணவ்ர் கழகத்தின் – கருஞ்சிறுத்தைகளின் சார்பில் போராட்டம்! போராட்டம்! ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

அனைத்துக் கட்சி தலைவர்களும் அணி வகுக்கின்றனர் – பி.ஜே.பி.யைத் தவிர – அதுதான் பார்ப்பனியத்தின் ‘பக்கா’ வடிவ மாயிற்றே!
தமிழர் தலைவர் போர் முழக்கம் செய்ய இருக்கிறார்.
அணி வகுத்து வாரீர் தோழர்களே! நாம் 97 பேர் – அவர்களோ மூன்று பேர்!
வெல்லப் போவது நாம்தான் – வெள்ளமெனத் திரண்டு வாரீர் தோழர்களே, குறிப்பாக மாணவர்களே, இளைஞர்களே, பெற்றோர்களே!
இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?

சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு போர்க்களத்தில் குதிப்போம் – வாரீர்! வாரீர்!!

குறிப்பு: 5ஆம் பக்கம் நிகழ்ச்சி நிரல் காண்க.

Ad imageAd image
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
எண்ணூர் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன்  கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம்
TAGGED:கருஞ்சட்டை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?