நெல்லையில் ஜாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை!

1 Min Read

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கண்டனம்!

திருநெல்வேலியில் கடந்த 13.6.2024 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணை யர், பாதுகாப்புக் கேட்டு, நேற்று (14.6.2024) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது ஜாதி வெறியர்களான சிலர், அந்த அலுவலகத்திற்குள் புகுந்து, மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலகத்தில் இருந்த தோழர்களையும் தாக்கியுள்ள நிகழ்வு, மிகவும் கண்டனத்திற்குரியது என்பதோடு, தென்மாவட்டங்களில் பகிரங்கப்படுத்தப்படும் இந்த ஜாதி வெறிக் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசின் முக்கிய கடமையாகும்!
சட்டப்படி நடைபெறும் கலப்புத் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. இது தொடர்ந்தால், அதுவே ஜாதிக் கலவரமாக மாறும் நிலை ஏற்பட்டு, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவும் கூடும்.
எனவே, இந்த ஜாதி வெறியர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் அவசரம், அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
15.6.2024 திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *