பண்டைய சமண மரபு புத்தகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

1 Min Read

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.6.2024 அன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய “Ancient Jain Legacy of Tamil Nadu” (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

எழுத்தாளர் ருச்சி ப்ரீதம் எழுதிய “தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு” என்ற புத்தகத்தில், மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் கலையில் சமண மதத்தின் தாக்கத்தையும், தமிழ்நாட்டின் அடையாளத்தில் சமண மதத்தின் ஒருங்கிணைந்த பங்கினையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் தாக்கம் குறித்த நுணுக்கமான விவரங்களுடன், மதத்திற்கு அப்பாற்பட்ட சமண மதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இப்புத்தகம் சமண மதத்திற்கும் தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்புகளை ஆராய்வதுடன், சமண மதத்தின் நீடித்த செல்வாக்கிற்கு சான்றாக விளங்குகிறது.

இந்நிகழ்வின்போது, சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் நட்ராஜன், டி.ஆர்.ஏ. நிறுவனத்தின் இயக்குநர் தாமன்பிரகாஷ் ரத்தோட், ரஞ்சித் ரத்தோட், சுதீர் லோடா ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *