திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா – விளையாட்டு விழா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல், தமிழ்நாடு

திருச்சி,ஆக.28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44 ஆம் ஆண்டு விழா மற்றும் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 47 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 26.8.2023 அன்று காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் விழா தொடங்கியது. நிகழ்வில் திருச்சி மாவட்ட காவல் உதவி ஆணையர் வி.சுரேஷ் குமார்,  திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கலைஞர் கருணாநிதி நகர் கிளை மேலாளர் வேலுமணி வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். 

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி. தர்சிணி  வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார்.  தொடர்ந்து இரு பள்ளிகளின் அனைத்து குழுக்களின் அணிவகுப்பு மிகச் சிறப்பான முறையில் நடை பெற்றது – பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அணி வகுப்பிற்குப் பின்பு மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் தாஜுனுஷா பீவி, செல்வி.காயத்ரி பள்ளியின் ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்தளித்தனர். 

தொடர்ந்து இரு பள்ளிகளின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவி களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் உடற் பயிற்சிகளும், குழுப் பயிற்சிகளும், யோகா, சிலம்பம், டேக்வாண்டோ போன்ற சாகசப் பயிற்சிகளும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

யோகா,சிலம்பம், பிரமிட் மற்றும் டேக்வாண்டோ பயிற்சிகளைக் கண்ட பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து, விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் இருவரும், விளையாட்டின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளையும் பற்றிய அறிவுரைகளைத் தங்கள் உரையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கினர்.

அரசியல், தமிழ்நாடு

தொடர்ந்து, ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடிய நீலம் மற்றும் மஞ்சள் நிற அணியி னருக்குச் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின், நிறைவாகப் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் துணைத் தலைவி செல்வி.சுவேதா நன்றியுரை வழங்க, விழா நாட்டுப்பண்ணுடன் வெற்றிகரமாக இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டு பள்ளிகளின் இருபால்  ஆசிரியர்கள்,  அலுவலக பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் பெரியார் கல்விக்குழுமங்களின் தாளாளர் மற்றும் செயலர், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள்,  5000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *