கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 11,000 பேர் விண்ணப்ப

1 Min Read

சென்னை, ஜூன் 15- இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 11,000 போ் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம், பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.எச்.), 4 ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.எச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2024 – 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது.
ஜூன் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோருக்கான இடங்க ளுக்கு ஜூலை 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட் டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு பி.வி.எஸ்சி. – ஏ.எச். படிப்பில் 45 இடங்களும், பி.டெக். படிப்புகளில் 8 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பி.வி.எஸ்சி. – ஏ.எச் படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும்.

இதுவரை பி.வி.எஸ்சி. – ஏ.எச். படிப்புக்கு 9,100 பேரும், பி.டெக். படிப்புகளுக்கு 1,900 பேரும் என மொத்தம் 11,000 மாணவா்கள் விண் ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *