பெங்களூரில் குடும்ப விழா

1 Min Read

அரசியல்

பெங்களூரு, ஆக.28- -கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், அறிஞர் அண்ணாவின் நெருங் கிய நண்பரின் மகனுமான 

பு.இரா.கஜபதி _- ஜெயலட்சுமி இணையரின் 65ஆம் ஆண்டு திருமண நாள் விழா பெங்களூர் சம்பங்கிராம் நகர் (24.8.2023) இல்லத்தில் சிறப்பாக நடை பெற்றது.

மாநிலத் தலைவர் மு.சான கிராமன் விழாவிற்கு தலைமை யேற்று கஜபதி _- ஜெயலட்சுமி இணையருக்கு மைசூர் தலைப் பாகைகளை இருவருக்கும் அணி வித்து, பயனாடைகளையும் இருவ ருக்கும் அணிவித் தார். உடைகள் நிறைந்த பரிசுப் பெட்டியினை வழங்கிப் பாராட்டினார். செயலா ளர் இரா.முல்லைக்கோ எழுதிய மூன்று நூல் களை இணையருக்கு வழங்கி 84 வயது நிறைவும், 65 ஆண்டு திருமண வாழ்வின் சிறப்பி னையும், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாவின் வீட்டிற்கு அரு கில் வாழ்ந்த இளமைக்கால நிகழ்வுக ளையும் மகிழ்வுடன் கூறி மகிழ்ச்சி யடையச் செய் தார்.

மேலும் நாடகச் செம்மல் வீ.மு.வேலு இணையரின் கழக செயல்பாடுகளை விளக்கி பாராட்டி மகிழ்ந்தார்.

கழகத்தின் தென்மண்டலச் செயலாளர், பெரும் புலவர் கி.சு.இளங்கோவன்_ – அன்னம் மாள் ஆகிய இருவரும் விழா நாயகர்களுக்கு மைசூர் தலைப் பாகை, பயனாடைகள், சரிகை அலங்கார மாலைகள் அணி வித்து சிறப்பு செய்து, வாழ்த் தினார் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *