ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நாட்டுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்?

– எம்.செல்வம், செங்கல்பட்டு

பதில் 1: இம்முறையாவது அனைவருக்குமான பிரதமராக அவரது ஆளுமை ஆட்சி – அமைய வேண்டும்.
எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள் அல்ல; மாறாக ஜனநாயகக் காப்பு ‘பிரேக்குகள்’ – ஆட்சியின் பாதுகாப்புக்கும் அவை தேவை என்பதை உணர்தல் அவசியம்.

——–

கேள்வி 2: மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து இருப்பது குறித்து?

– வே.வெங்கடேசன், திருத்தணி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2:வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறலாம்’ என்ற பழமொழிதான் – ஜனநாயகத்தின் கூறு என்பதைக் காட்டுகிறது! மக்கள் சக்தி மாறக்கூடியது.

——–

கேள்வி 3: சமூக நீதி என்றால் என்ன?

– மா.சண்முகசுந்தரம், மதுரை

பதில் 3: சமூக அநீதி காலங்காலமாய் இருந்ததை நீக்கும் மாமருந்து. ‘அனைவருக்கும் அனைத்தும்’, ‘எல்லார்க்கும் எல்லாமும்!’,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” போதுமா?

——–

கேள்வி 4: வாழ பணம், குணம் எது தேவை?

– வா.பரிமளம், திண்டிவனம்

பதில் 4: இரண்டும் தேவை. ஆனால் குணத்தை இழக்காத பணம் தேவையான அளவுக்கு இருந்தால் போதும்! பணம் நம் பணியாளனாகவே இருக்கட்டும். குணத்தை மாற்றும் குடிபோதையாக மாறிவிடக் கூடாது!

——–

கேள்வி 5: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவினை எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி நாடாளுமன்ற தேர்தல் முடிவு களேபரத்திற்கு இடையில் அவசரமாக வெளியிட்டது ஏன்?

– சங்கமித்ரா, மன்னார்குடி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5: எல்லாம் திட்டமிட்ட சூழ்ச்சி வலைதான். ஊர் சிரிக்கிறதே ‘நீட்’ யோக்கியதையைக் கண்டு!

——–

கேள்வி 6: இந்தியாவின் வரலாற்றை எழுத அமைக்கப்பட்ட குழுவில் தென் இந்தியாவைச் சேர்ந்த எவரும் இல்லை. இதில் ஒருவர் கூட பழங்குடியை சேர்ந்தவரோ, ஒடுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களோ இல்லாதது பற்றி?

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 6: வன்மையான கண்டனத்திற்குரியது. நமது எம்.பி.க்கள் இதனை நாடாளுமன்றத் தொடரில் எழுப்பி, தீர்வு காண வேண்டும்.

——–

கேள்வி 7: குவைத் தீ விபத்தில் தமிழ்நாடு அரசின் பணி எப்படி?

– பா.முகிலன், சென்னை-14

பதில் 7: வழக்கம்போல உடனடியாக பணிகள் பலே

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

முதலமைச்சர், அயலகத்துறை அமைச்சர் – அரசு அதிகாரிகள்!

——–

கேள்வி 8: அரசியல் கட்சிகள், அமைப்புகள் மக்களிடம் நன்கொடை என்று வசூலிக்கும் பணம் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குச் செலவழிக்கப்படுகிறதா?

– க.கலை, நெல்லிக்குப்பம்

பதில் 8: சிக்கலான, எளிதில் பதில் அளிக்க முடியாத கேள்வி இது!

——–

கேள்வி 9: ‘நீட்’ தேர்வு முழுமையாக ஒழிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்; பா.ஜ.க. அரசு ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறதே, நீட் தேர்வு ஒழிக்கப்படுமா?

– மா.சங்கர், செங்கல்பட்டு

பதில் 9: மக்கள் மன்றமே இறுதி எஜமானன் – வட இந்தியாவும் நீட் தேர்வின் கொடுமையை உணர்ந்துவிட்டதே – விடியல் நிச்சயம்!

——–

கேள்வி 10: கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால், அங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பறி கொடுத்துள்ளதே, அதற்கு என்ன காரணம்?

– க.சரவணகுமார், கன்னியாகுமரி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 10: மெத்தனமும், கோஷ்டிச் சண்டையும்தான்! “பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும்தான்”!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *