மீண்டும் மணிப்பூரில் வன்முறை: குக்கி கிராமமே தீக்கிரையாக்கப்பட்டது

Viduthalai
1 Min Read

இம்பால், ஆக. 29 – மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக் கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு 27.8.2023 அன்று மீண்டும் வன்முறை சம்பவம் நடந்தது.

தலைநகர் இம்பாலில் நியூ லம்புலேன் பகுதியில், யாரும் குடியிருக்காத 3 வீடுகளுக்கு அடையாளம் தெரியாத கும்பல் தீ வைத்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். ஒன்றிய, மாநில பாதுகாப்பு படைகளை அங்கு குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். காவல்துறைஉயினர்கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். 

இதற்கிடையே, இம்பால் மேற்கு மாவட்டம் சகோல்பாண்ட் என்ற இடத்தில் சுகாதாரத்துறை மேனாள் அமைச்சர் கே.ரஜோவின் வீட்டுக்கு காவலுக்கு இருந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒரு கும்பல், 3 ஆயுதங்களை பறித்துச் சென்றது.

அந்த ஆயுதங்களில், ஏ.கே. ரக துப்பாக்கிகளும், ஒரு நீளமான துப்பாக்கியும் அடங்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *