மின் கட்டணம் உயர்வா? வதந்திகளுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 13– மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின்கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப் படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், மின்வாரியத்துக்கு வரவை விட செலவு அதிகம் உள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதை ஈடுசெய்யும் விதமாக வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், மின்கட்டணம் உயர்வு என பரவி வரும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:மின்கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின்கட்டண உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம். மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *