ஜூன் 24இல் தொடங்குகிறது மக்களவையின் முதல் கூட்டம்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 13– 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.18ஆவது மக்களவைக்கான தேர்தல் 7கட்டங்களாக நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. தேசிய கட்சிகளான பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.

அதே வேளையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், 28 கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும் 234 தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. இது பாஜகவின் வெற்றியை விட குறைவு.இதையடுத்து பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜுன் 9ஆம் தேதி இரவு பிரதமராக மோடி பதவி ஏற்றார்.அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி களைச் சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்இதையடுத்து, மக்க ளவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை கூட்டப்படுகிறது.

அதன்படி, 18-ஆவது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவைத் தலைவர் உரையுடன் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த கூட்டத்தொடரில் நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்க ளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும், புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள்.உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவைத் தலைவர் பதவிப் பிர மாணம் செய்து வைப்பார். ஜூன் 26ஆம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.27இல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *