குவைத் நாட்டு தீ விபத்து! நமது இரங்கல் – ஆறுதல்!

0 Min Read

புலம்பெயர்ந்து குவைத் நாட்டில் பணிபுரிய, தொழில் நடத்திட சென்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 49 பேரின் உயிரைப் பலிகொண்ட நிகழ்வு நெஞ்சை உலுக்குகிறது!

இந்திய நாட்டின் குடிமக்களில் பலரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்வர் உள்பட உயிரிழந்துள்ளதும், பலர் அபாய கட்டத்தில் உள்ளதும் மிகத் துயரமானதாகும்.

அவர்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் உடனடியாக தேவைப்படும் ஏற்பாடுகளையும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலையும், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி,
சென்னை தலைவர்,
13.6.2024 திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *