விண்வெளி ஆய்வு மய்யத்தில் மருந்து – எதிர்ப்புக் கிருமி ஆராய்ச்சி அய்அய்டி – நாசா கூட்டு முயற்சி

1 Min Read

சென்னை, ஜூன் 12- சென்னை அய்அய்டி மற்றும் நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளா்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில், மருந்து – எதிா்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

இது குறித்து சென்னை அய்அய்டி வெளியிட்ட செய்தி:
விண்வெளி வீரா்களின் ஆரோக்கியத் துக்கும், பூமியில் வசிப்போருக்கும் இந்த ஆராய்ச்சியின் மூலம் முக்கிய பயன் பாடுகள் கிடைக்கப் பெறலாம். மருந்து – எதிா்ப்பு நோய்க்கிருமிகளில் காணப்படும் மரபணு, செயல்பாட்டு, வளா்சிதை மாற்ற மேம்பாடுகளைப் புரிந்து கொள்வதற்காக விரிவான ஆய்வை ஆராய்ச்சியாளா்கள் மேற்கொண்டனா்.

குறிப்பாக, பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் மேற்பரப்புகளில் காணப் படும் பொதுவான நோய்க்கிருமிகளான மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. வழக்கமான மருத்துவ வசதிகளிலிருந்து மாறுபட்ட நோய் எதிா்ப்பு சூழலில் உள்ள விண்வெளி வீரா்கள், தங்களின் விண்வெளிப் பயணங்களின் போது தனிப்பட்ட ஆரோக்கிய சவால்களை எதிா்கொள்கின்றனா்.

அவா்களின் ஆரோக்கியத்தில் இந்த நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டுமெனில், விண்வெளி நிலையத்தில் உள்ள நுண்ணுயிா்ப் பரவல் குறித்த புரிதல் அவசியமாகிறது. விண்வெளி வீரா்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், எதிா்பாராத சூழலில் நோய்க்கிருமிகள் தொடா்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும், விண்வெளி சூழலில் நுண்ணுயிரிகளின் நோய்க் கிருமித் திறனை ஆராய வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

சென்னை அய்அய்டி மற்றும் நாசாவின் ஜேபிஎல் இடையிலான கூட்டு முயற்சிகள், அறிவியல் அறிவை மேம்படுத்துவதிலும், விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள சவால்களை எதிா்கொள்வதிலும், பன்னாட்டு கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் காா்த்திக் ராமன் கூறும்போது, ‘மிகவும் சவாலான சூழ்நிலைகளில் வளா்வதால் நுண்ணுயிரிகள் நம்மைத் தொடா்ந்து புதிரில் ஆழ்த்தி வருகின்றன.
இதுபோன்ற ஆய்வுகள் நுண்ணுயிரிகளின் வளா்ச்சி மற்றும் உயிா்வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் சிக்கலான தொடா்புகளை அவிழ்க்க உதவிக்கரமாக இருக்கும்’ என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *