அறிவியல் வளர்ச்சி! சூரியனின் படத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1

1 Min Read

பெங்களூரு, ஜூன் 11 இந்தியாவின் ஆதித்யா எல்-1 சூரியனின் சமீபத்திய தோற்றத்தை படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

சூரியனை ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 127 நாள் பயணத்திற்கு பிறகு கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் மாதம் சூரிய வட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா பயணித்து கொண்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் ஆதித்யா எல்-1 சில ஒளிப்படங்களை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சீற்றத்துடன் கூடிய சூரியன் படங்கள் குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘ஆதித்யா எல்-1இல் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்.யூ.அய்.டி. தொலை நோக்கி சூரியனின் அல்ட்ரா வயலட் ஒளிப்படத்தை எடுத்துள்ளது.

எக்ஸ் மற்றும் எம் கதிர்கள் உள்ளிட்ட பல்வேறு கதிர்கள் குறித்த விவரங்களும் நமக்கு கிடைத்துள்ளன. மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பூமியில் காந்த கதிர் வீச்சு ஏற்பட்டதையும் மே 11இல் அனுப்பிய ஒளிப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது‘ என்றனர். அது மட்டும் இன்றி ஆதித்யா எல்-1 எடுத்த ஒளிப்படங்கள் மற்றும் அதன் விபரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *