கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

11.6.2024
டெக்கான் ஹெரால்ட்:
* பாடத்திட்டத்தில் மனுஸ்மிரிதி இடம் பெறுவதற்கு எதிர்ப்பு. பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆனந்தராஜ் ராய்காட்டில் நடந்த போராட்டத்தில் மனுஸ்மிருதியை எரித்தார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானம், வாழ்க்கை குறித்தே பெரும்பாலானோர் கவலைப்படு கின்றனர், இஸ்லாமியர்கள் கால ஆட்சி குறித்து அல்ல என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்கிறார் பட்ரலேகா சாட்டர்ஜி.
* இன்னும் மூன்று மாதங்களில் வர இருக்கும் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் வெற்றி தான் அடுத்த இலக்கு என்கிறார் சரத் பவார்.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டங்களை தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம் நடத்தி வருகிறது. விரைவில் அறிக்கை அளித்திட முடிவு.
தி இந்து:
* 2024 தேர்தலில் ஹிந்துத்துவா அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது, சி.எஸ்.டி.எஸ். – லோக்நிதி ஆய்வு அறிக்கை.
* 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 14 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை இழந்துள்ளனர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் தேர்வு முறைகேடுகள்: டில்லியில் கல்வி அமைச்சகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம், மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை.
* என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு உதிரி இலாகாக்கள் அளிக்கப்பட்டுள்ளது, ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எங்களுக்கு கேபினட் தகுதி அமைச்சர் வேண்டும், ஷிண்டே சிவசேனா அணி உறுதி.
* இந்திய வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத தேசிய முன்னணி அரசு அமைச்சரவை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்களவைத் தேர்தல் தோல்வியில் வெடித்த பிரச்சினை விஸ்வரூபம் – அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் மோதல் வலுக்கிறது.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *