சென்னை, ஜூன் 11- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று (10.6.2024) தொடங்கியது.
தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஏ, பி.எஸ்சி, பி.காம்., பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்பு களில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில், 2024-2025ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.
இதை தொடர்ந்து, தர வரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ஆம் தேதி வரை அந்தந்த அரசு கலை, அறிவியல் கல் லூரிகளில் நடந்தது. இதில், விளையாட்டு வீரர்கள், மேனாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கலந்து கொண்டனர்.
நேற்றைய நாள் முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல் லூரிகளில் தொடங்கியது. வருகிற 15ஆம் தேதியுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடி வடையும்.
அதன் பின்னர் 2ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாண வர்களுக்கான வகுப்பு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.