பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

1 Min Read

சென்னை,ஆக.30 – பெரியார் சிலை உடைப்பு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ.க. மேனாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பா.ஜ.க. மேனாள் தேசிய செயலா ளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன் றத்தில் மனுக்கள் தாக்கல் செய் திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனராஜ் ஆஜரானார். அதற்கு அரசு தரப் பில் வழக்குரைஞர் பாபு முத்து மீரான் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அற நிலையத் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக அவ தூறு கருத்து தெரிவித்தது தொடர் பாக, சிவகாஞ்சி, கரூர், ஊட்டி, திருவாரூர் ஆகிய காவல் நிலையங் களில் பதிவு செய்யப்பட்ட வழக் குகள், முதல் தகவல் அறிக்கை கட்டத்திலேயே இருப்பதால் அந்த 4 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இதே விவகாரத்தில் விருதுநகர், இருக்கன்குடி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் பதி வான வழக்குகளில் நீதிமன்றங் களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகி விட்டது. எனவே,இந்த 3 வழக்கு களை ரத்து செய்ய முடியாது. ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சிறீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப் படுகிறது.

பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு காவல் நிலை யத்தில் பதிவாகி, அங்குள்ள நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படு கின்றன. அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கனிமொழியை விமர்சித்தது தொடர்பாக ஈரோட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அந்தந்த விசாரணை நீதிமன்றங்கள் 3 மாதத்தில் வழக்கைமுடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *