இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் திரும்பினர்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக. 30 – நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மீன வர்கள் 10 பேர் கடந்த 7ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப் போது இலங்கை கடற்படை காவலர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்தனர். பின்னர், படகுகளுடன் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீன வர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் நாகையை சேர்ந்த 10 மீனவர்களையும் கடந்த 21-ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 10 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக் கப்பட்டனர். 10 மீனவர்களுக்கும் கொழும் பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *