தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளரவில்லை மோடி 8 முறை பிரச்சாரம் செய்தும் கடந்த தேர்தலைவிட வாக்கு குறைவு

viduthalai
3 Min Read

அண்ணாமலை போன்றவர்கள் இருந்தால் ஜெயிக்க முடியாது
படுதோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஓமலூர், ஜூன் 10- அண்ணா மலை போன்ற மாநில தலைவ ர்கள் இருப்பதால்தான் பாஜவு க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, தமிழ்நாட் டில் மோடி 8 முறை பிரச் சாரம் செய்தும், கடந்த தேர் தலைவிட வாக்குசதவீதம் குறைந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதையடுத்து, சேலம் நெடுஞ் சாலை நகரில் உள்ள வீட்டில் கடந்த 2 நாட்களாக மேனாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் தோல்விக் கான காரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி கேட்டு வந்தார். குறிப்பாக, சேலத்திலேயே அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்தது. இதுகுறித்து சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 8.6.2024 அன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து எங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. ஒன்றியத்தில் ஆளும் பாஜ கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். அமித்ஷா, நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரச்சாரம் செய் தனர். ஆனால் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட அதிமுக கூட்டணி ஒரு சதவீத ஓட்டுகள் அதிகம் வாங்கியுள்ளது. உண்மையில் இது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்கள் பிரிந்து சென்றதால் அதிமுக ஓட்டுக்கள் எங்கும் சிதறவில்லை. மாறாக எங்களின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. வேண்டாதவர்கள் பிரிந்து சென்றதால்தான் எங்கள் ஓட்டு ஒரு சதவீதம் கூடியுள்ளது. இதை ஊடகங்கள் முன்னி லைப்படுத்தவில்லை. எங்களின் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக் கும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை  யாராலும் வெல்ல முடியாது

தமிழ்நாட்டில் பாஜ வளரவி ல்லை. 2019ல் 18.80 சதவீதம் பெற்ற பாஜ கூட்டணி, இப் போது அதிக கட்சிகளை இணைத்து போட்டியிட்டது. ஆனாலும் 18.02 சதவீதம் வாக்குகள்தான் பெற்றுள்ளது. கோவையில் அண்ணாமலைக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பதெல்லாம் பொய். சி.பி.ராதாகிருஷ்ணன் 2019இல் பெற்ற வாக்குகளையும், இப் போது அண்ணாமலை பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியும். தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாது. 1991இல் 2 இடங்களை பெற்ற திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1996இல் 4 இடங்களை பெற்ற அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஒன்றியத்தில் பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது ஏன்?

ஒன்றியத்தில் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை என்பது மக்கள் வழங்கிய தீர்ப்பு. தமிழ்நாட்டில் பாஜவை வழிநடத்த நல்ல தலைவர் இருந்திருந்தால் அந்தக்கட்சி மேலும் அதிக வாக்குகளை பெற்றிருக்கும்.

வரைப்போலவே வேறு சில மாநிலங்களிலும் தலைவர்கள் இருப்பார்கள் என்று கருதுகிறேன். இதுதான் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு காரணம். தேசிய கட்சிகள், மாநில கட்சிகளை தங்கள் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், மாநிலத்தின் உரிமைக ளை தர மறுக்கின்றன. நாங்கள் பாஜ கூட்டணியில் இருந்து விலகியதற்கு இது தான் முக்கிய காரணம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவையில் அண்ணாமலைக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பதெல்லாம் பொய். சி.பி.ராதாகிருஷ்ணன் 2019இல் பெற்ற வாக்குகளையும், இப்போது அண்ணாமலை பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டு பார்த்தால் இது தெரியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *