சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு

சென்னை,நவ.19- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப் பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாடு அரசு சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப் படுத்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு களைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர், 10ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக் கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அர சுக்கு திருப்பி அனுப்பலாம் அல் லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய் யாமல் காலவரையின்றி மசோதாக் களை கிடப்பில் போட முடியாது” என்றார்.

இதனையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தாக் கீது அனுப்ப உத்தரவிட்டது. அந்த தாக்கீதில், “மக்களின் உரிமைகளைச் சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்” என்ற தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது. “ஒன்றிய அரசின் அட் டர்னி ஜெனரல் அல்லது அவருக் குப் பதிலாக சொலிசிட்டர் ஜென ரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்க மளிக்க வேண்டும்” என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

அரசமைப்பு சட்டப்பிரிவு 200 இன்படி, மாநில சட்டப்பேரவை களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுந ரின் ஒப்புதல் கோரி அனுப்பப்படும் கோப்புகள் மீது அவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்

ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத் தில் 2020ஆம் ஆண்டில் நிறைவேற் றப்பட்ட சட்ட முன் வடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, கடந்த ஏப் ரல் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு அரசு அனுப்பிய சட்ட முன் வடிவுகளை நிறுத்தி வைத் தாலே நிராகரிப்பதாக பொருள்” என்று அகந்தையோடு தெரிவித் தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்த உடன் அவசர அவசரமாக 10 சட்ட முன் வடிவுக ளையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

உடனடியாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தைக் (18.11.2023) கூட்டி, சட்டப் பேரவை விதி 143இன்படி, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர் மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத் தக்கது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண் டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

-இவ்வாறு வைகோ அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *