ஒன்றிய அமைச்சரவை பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்

1 Min Read

கொல்கத்தா, ஜூன்10- குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (9.6.2024) நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிர சுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த கட்சி இந்த விழாவை புறக்கணித்தது.

இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள சுதிப் பந்தோபாத்யாய் கூறு கையில், ‘புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜனதா தலைவர் பிரகலாத் ஜோஷி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். ஆனால் அதில் பங் கேற்பதில்லை என எங்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது’ எனக் கூறினார்.

முன்னதாக கட்சி யின் தலைவரும், முதலமைச்சருமான மம்தாவும் இந்த விழாவை புறக்கணிப்பதாக நேற்று முன்தினம் (8.6.2024) அறிவித்திருந்தார்.

இது குறித்து அவர், ‘பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு எங்களுக்கு வரவும் இல்லை, அதில் பங்கேற்கவும் மாட்டோம்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *