இதுதான் கடவுள் சக்தி!

1 Min Read

ஆவடியில் அம்மன் கோயில் பூட்டு உடைப்பு – பணம், நகை திருட்டு

ஆவடி, ஜூன் 10- ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 43). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் நிர்வாகியாக உள்ளார். நேற்று (9.6.2024) காலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலை நெற்றியில் இருந்த அரை பவுன் தங்க பொட்டு மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *