மருந்தாளுநர் பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 Min Read

மேட்டுப்பாளையம், ஜூன் 9 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று (8.6.2024) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கு 70 சதவீதமாக இருந்த மகப்பேறு இறப்பு 45.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 1221 மருத்துவர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில் 2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மேலும், 923 மருந்தாளுநர் காலி பணியிடங்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *