கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.6.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
➡நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப் பெண்களை ஆய்வு செய்ய மேனாள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
➡ வெறுப்பு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என அகிலேஷ் கருத்து.
➡ இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்று உரிமை கோரவில்லை என்றால் நாளை உரிமை கோராது என்று அர்த்தமல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம் என மம்தா பேச்சு.
➡ நீட் தேர்வு மதிப்பெண் மோசடி குறித்து சி.பி.அய். விசாரிக்க அய்தராபாத் வழக்குரைஞர் மனு.
➡ காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡மகாராட்டிராவில், சரத் பவாரின் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல், பாஜகவின் டில்லி ரிமோட் கண்ட்ரோல் அரசியலை முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
➡ நீட் தேர்வு முடிவுகளில் மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மகாராட்டிர அரசு குற்றச்சாட்டு; அதை ரத்து செய்ய கோரிக்கை.
➡ நீட் ‘முறைகேடுகள்’: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும், அகிலேஷ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் கோரிக்கை.
➡ தேர்தலில் படுதோல்வி காரணமாக அண்ணா மலைக்கு எதிராக, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் போர்க்கொடி.

டைம்ஸ் ஆப் இந்தியா:
➡கூட்டணிக் கட்சிகளை சார்ந்திருக்கும் புதிய பாஜக தலைமையிலான என்.டி.ஏ. அரசு, அதன் முக்கிய ஆதரவு மதச்சார்பற்ற கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் அய்க்கிய ஜனதா தளத்தை மீறி, ஹிந்துத்வா அரசியலை செய்ய இயலாது.

குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *