சேலம், ஜூன் 9- சேலம் மாவட்ட, மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ,சேலம் மாநகர் திராவிடர் கழகத் தலைவர் அரங்க இளவரசன் இல்லத்தில் 8.6.2024 அன்று காலை 11 மணிக்கு, நடைபெற்றது.
தலைமை கழக அமைப்பாளர் கா. நா.பாலு தலைமை வகித்தார்.
மாவட்ட கழக காப்பாளர்கி. ஜவகர், மாவட்ட தலைவர்அ.ச. இளவழகன், மாநகர் தலைவர் அரங்க இளவரசன், மாநகர் செயலாளர் சி. பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
05.05.2024 அன்று சேலம், கருங்கல் பட்டியில் நடைபெற்ற கூட்டத்தின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரவு செலவு விபரம்
நன்கொடை வரவு – 30,100
கடை வீதி நன்கொடை திரட்டல் – 7300 +
மொத்த வரவு – 37,400
மொத்த செலவு – 30,360
ஆக மொத்தம் மீதி தொகை 7,040
20.4.2022இல் சேலத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்ட வரவு செலவில் மீதமான தொகை 17,630 மாவட்ட காப்பாளர் கி.ஜவகர் அவர்களின் பொறுப்பில் இருந்து வந்தது.
மேற்படி தொகை மாநகர் செயலாளர் சி.பூபதி அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
மாநகர் செயலாளர் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மொத்த தொகை = 7040 + 17630 = 24,670.
தொடர்ந்து மாநகர பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் பொது மக்களிடம் நன்கொடை திரட்டி இயக்க நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் இனிதே முடிவடைந்தது.