சேலம், ஜூன் 9– நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை தழுவியது விவாதமாக மாறியிருக்கும் நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, “2026 தேர்லிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில். தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக பல இடங்களில் 3ஆம் இடத்திற்கு சென்றது. பாஜக இந்த தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா?
என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. இதனை மறுத்த எடப்பாடி, 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விளக்கமளித்திருக்கிறார்.
அவர் பேட்டிளித்த தாவது, “சட்டமன்ற தேர் தலுக்கும், மக்களவைத் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் வந்தால் மக்கள் எங்க ளுக்கு சாதகமாக வாக் களிப்பார்கள். திமுக – அதிமுக இரண்டு கட்சி களுமே மாறி மாறி வெற்றி தோல்வியைக் கண்டு வருகின்றன.
பாஜகவுடன் கூட் டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப் பார். அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார்.
பாஜக உடன் இனி கூட்டணி இல்லை. எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதிமுக மீண்டும் வலுப் பெறும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசிய கட்சிகள் வெற்றி பெறும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 2024ஆம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதை போல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
2014-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த கூட்டணி 18.80% வாக்குகள் பெற்றார்கள். 2024ஆம் ஆண்டு இந்த தேர்தலில் அந்த கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 18.28%. ஆகவே, 2014 தேர்தலை காட்டிலும் 0.62% வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டில் பாஜக அதிக வாக்கு சதவிகிதம் பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது வருத்த மளிக்கிறது.