திருவலஞ்சுழி மோகன் இணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

குடந்தை, ஆக. 30- குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர்  க.மோகன் அவர்களது இணையர் மோ.லதா (வயது 43) 27-8-2023 அன்று அதிகாலை 5.00 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

இறுதி நிகழ்வுகள் மாலை  திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் ரோடு, மாரியம்மன் கோயில் அருகில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இறுதி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  திராவிடர் கழகத் தின் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் க. சிவக்குமார், மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ. இரமேசு,. மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணியின் துணைத் தலைவர் குமாரமங்கலம் சங்கர், மாவட்ட மகளிர் அணியின் தலைவர் திரிபுர சுந்தரி மற்றும் ஏராளமான கழகத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.மோகன், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலை வர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஆகியோர் அலைபேசியில் அழைத்து இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *