திருவள்ளுவருக்கு காவி நிறமா? கழக தோழர்கள் முயற்சிக்கு வெற்றி

1 Min Read

அம்பத்தூர் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி வளாக சுற்றுச் சுவரில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருப்பதை கண்டு திருமுல்லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ் தோழர்களுடன் 5.6.2024 அன்று பள்ளியில் புகார் அளித்தனர்.

அப்போது தலைமை ஆசிரியர் இல்லாததால் மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். மேலாளர் “இது குறித்து நடவடிக்கை எடுக்கிறோம், பிரச்சினையை பெரிது படுத்த வேண்டாம்” என்று தெரிவித்தார்.

பெரியார் தொண்டர்களின் முயற்சியால் காவி நிறம் அழிக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் வரையப்பட்டது.

பிரச்சினையை பெரிதாக்காமல் உடனே மாற்றிய பள்ளி நிர்வாகத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *