கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது

2 Min Read

மைசூரு, ஆக. 31- கருநாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண் ணீர் இறக்கப்பட்டுள்ளது. வினா டிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது.

கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வ தில் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நிலையில் “இந்த ஆண்டு கருநாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரிப் படுகையில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட் டுமே நிரம்பியது என கருநாடகம் கூறி வருகிறது.

இதற்கிடையே காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழ்நாட்டிற்கு கருநாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தொடரப் பட்டு உள்ளது. அந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், காவிரியில் தமிழ்நாட் டிற்கு 15 நாள்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, அதாவது கருநாடகம்_-தமிழ்நாடு எல்லை யான பிலிகுண்டலுவில் செல்லும் நீரின் அளவுப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்கு முறை குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் 15 நாள் களுக்கு திறந்து விடக்கூறி கரு நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு 29.8.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இதுபற்றி முதல மைச்சர் சித்தராமையாவிடமும், நீர்ப்பாசன துறை உள்பட பல் வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக் கப்படும் என்றும், காவிரி விவகா ரத்தில் உச்சநீதிமன்றத்தில் திட்டு வாங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே நேற்று முன் தினம் (29.8.2023) கே.ஆர்.எஸ். அணை முன்பு கருநாடக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு “தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது” என்று முழக்கமிட்டனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவு நகலையும் தீயிட்டு எரித்தனர்.  இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட் டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 7,380 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக் கிறது.

இதன்மூலம் பிலிகுண்டலுவில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட் டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருநாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் எந்த நேரம் வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் கே.ஆர்.எஸ். அணையை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டுள் ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *