செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம்

1 Min Read

அரசியல்


செய்யாறு, ஆக. 31-
செய்யாறு பகுத் தறிவாளர் கழகம் சார்பில் இந் திய பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு “அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம் அறியாமையை அகற்றுவோம்” என்ற தலைப்பில் செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

செய்யாறு கழக மாவட் பகுத் தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் நல்லாசிரியர் பா.ரவிச்சந்திரன், ஆசிரியர் எச். முபாரக், சிறுநல்லூர் டி.சின்ன துரை ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோவிந்தன், பொன்,சுந்தர், வெ.இளஞ்செழி யன், என்.கஜபதி, தே.ராஜேஷ், வெ.தயாளன், என்.பரந்தாமன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மு.வெங்கடேசன் நன்றி கூறி னார். காஞ்சி உலக ஒளி பகுத் தறிவு பாடல்களை பாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *