25 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: திருமா

1 Min Read

சென்னை, ஜூன் 6- “இரண்டு எம்.பி.,க்களை பெற்றதன் வாயிலாக, மாநில கட்சி அந்தஸ்தைப் பெற்றது, கால் நூற்றாண்டுக்கும் மேலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திரு மாவளவன் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கி றது. இந்த தேர்தலில், சிதம்பரத்தில் போட்டி யிட வேண்டாம்; வேறு தொகுதியில் போட்டியி டுமாறு, பலரும் ஆலோ சனை கூறினர். ஆனால், சிதம்பரம் தொகுதி என்பது என் தாய்மடி.

எனவே, இங்கு போட்டியிடுவதில் உறுதியாக இருந்தேன். என் நம்பிக்கையை உறு திப்படுத்திய சிதம்பரம் மக்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.

தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு பா.ஜ.க.வின் வெற்றியை, ‘இந்தியா’ கூட்டணி தடுத்துள்ளது. மோடி அலை என்பது மாயை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சிதம்பரம், விழுப்புரம் என, இரண்டு தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றுள்ளது.

இதன் வாயிலாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை, வி.சி.க. பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

கடந்த 1999 முதல் தேர்தல் களத்தில் இருக்கும் எங்களின் கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு, உழைப்பிற்கு, மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது.

– இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *