சூரியனை ஆய்வு செய்வது எப்படி? இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

2 Min Read

அரசியல்

‘ஆதித்யா-எல்1‘ விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற் காக ‘ஆதித்யா-எல்1’ என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து வருகிற 2.9.2023 அன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. 

இதற்கான இறுதிக்கட்டப்பணியான ‘கவுண்ட் டவுன்’ வருகிற செப். 1ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விஞ்ஞானிகள் விளக்கம்

இதற்கிடையே ‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன?, இது சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்ய இருக்கிறது என்று இஸ்ரோ ஆய்வாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- 

‘ஆதித்யா- எல்1’ விண்கலத்தில் சூரிய னின் கரோனா, ‘குரோமோஸ்பியர், போட் டோஸ்பியர்’ மற்றும் சூரியக் காற்று ஆகிய வற்றை ஆய்வு செய்ய 7 கருவிகள் பொருத் தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் ‘கரோனல்’ வெப்பமாக்கல் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல், துகள் மற்றும் புலங்களின் பரவல் போன்றவற்றை புரிந்து கொள்வதற் கான மிக முக்கியமான தகவல்களை வழங் கும். 

நான்கு ‘ரிமோட் சென்சிங்’ கருவிகள் சூரியனின் வளிமண்டலத்தை ஒளியின் வெவ்வேறு அலை நீளங்களில் படம் பிடிக்கும். இதில் புலப்படும், புற ஊதா மற்றும் எக்ஸ் கதிர் களும் அடங்கும். 

சூரிய கரோனாவை படம் பிடித்து அதன் இயக்கவியலையும் ஆய்வு செய்யும். ‘சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்’, ஒளிக்கோளம் மற்றும் ‘குரோ மோஸ்பியரை’ குறுகிய மற்றும் அகன்ற அலைவரிசையில் உள்ள புற ஊதா அலை நீளங்களில் படம் பிடிக்கும் தன்மை கொண்டது. அதேபோல் ‘சோலார் லோ எனர்ஜி எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ சூரியனில் இருந்து மென்மையான எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ‘ஹை எனர்ஜி எல்-1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ கருவி சூரியனில் இருந்து கடின எக்ஸ்ரே உமிழ்வை ஆய்வு செய்யும்.

அதில் உள்ள 3 இன்-சிட் கருவிகள் சூரியக் காற்றின் கலவை, இயக்கவியல் மற்றும் காந்தப்புலத்தை அளவிடும். சூரியக் காற்றின் துகள் பரிசோதனை, சூரியக் காற்றின் கலவை மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள பிளாஸ்மா அனலைசர் தொகுப்புக் கருவி சூரியக் காற்றின் பிளாஸ்மா பண்புகளை அளவிட இருக்கிறது. 

மேம்பட்ட ‘டிரை- ஆக்சியல் ஹை-ரெசல் யூஷன் டிஜிட்டல்’ காந்தமானிகள் சூரிய காற்றில் உள்ள காந்தப்புலத்தை அளவிட்டு தகவல்களை அளிக்க இருக்கிறது. இவ்வாறு இஸ்ரோ ஆய்வாளர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *