நிலவில் ஆக்சிஜன், சல்பர் தனிமங்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

Viduthalai
1 Min Read

அரசியல்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண் கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் – 3 விண்கலத் தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக் யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நிலவின் தென் துருவத் தில் கனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர் பாக இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட் ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது. 

அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டினியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதும் உறுதியாகியுள்ளது. 

ஹைட்ரஜன் உள்ளதா என்பதை கண்டு பிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *