பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

1 Min Read

பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 1.6.2024 காலை 10 மணி அளவில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ‘மானம் காத்த சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், நியூ ஜெர்சி இளமாறன், சிக்காகோ விஜய் சாந்தலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில அமைப்பாளர் வா. நேரு, சிதம்பரம் ஆறு கலைச்செல்வன், மும்பை கணேசன், தீபப்பிரியா, பெரியசாமி, கனடா ஆசிப் ரஜினிகாந்த், எழில் வடிவன் கலைவாணன், அறிவு பொன்னி, கலைச்செல்வி ,கே. என் .பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர் .கார்த்திகா ஜெகதீஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில் பலரும் பங்கேற்று பயன் துய்த்தனர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தால் தமிழர்கள் அடைந்த பயன்கள் மற்றும் குடிஅரசு, திராவிடன், விடுதலை போன்ற ஏடுகள் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், சிந்தனை புரட்சி பற்றிய விழிப்புணர்வூட்டும் விளக்கம் அளிக்கும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *