மதிமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோ தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். துரை வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மதிமுக பொருளாளர் மு.செந்தில்அதிபன், கொள்கை விளக்கச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன ராஜ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் மற்றும் மதிமுக பொறுப்பாளர்கள் உள்ளனர். தந்தை பெரியார் நினைவிடத்தில் துரை வைகோ மதிமுக தோழர்களுடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (சென்னை, 5.6.2024)
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோவிற்கு தமிழர் தலைவர் வாழ்த்து
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books