பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வாய்ப்பு

Viduthalai
1 Min Read

துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாஸ்டர், இன்ஜின் டிரைவர், ஒர்க்சாப் பிரிவுகளில் உதவி ஆய்வாளர் 11, கான்ஸ்டபிள் 46, தலைமை கான்ஸ்டபிள் 105 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்த பின், தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் உதவி ஆய்வாளர் பணிக்கு 22 – 28, மற்ற பணிக்கு 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: உதவி ஆய்வாளர் பணிக்கு ரூ. 247.20. மற்ற பணிக்கு ரூ. 147.20. எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.7.2024
விவரங்களுக்கு: rectt.bsf.gov.ina

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *