பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வாய்ப்பு

1 Min Read

துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாஸ்டர், இன்ஜின் டிரைவர், ஒர்க்சாப் பிரிவுகளில் உதவி ஆய்வாளர் 11, கான்ஸ்டபிள் 46, தலைமை கான்ஸ்டபிள் 105 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்த பின், தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் உதவி ஆய்வாளர் பணிக்கு 22 – 28, மற்ற பணிக்கு 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: உதவி ஆய்வாளர் பணிக்கு ரூ. 247.20. மற்ற பணிக்கு ரூ. 147.20. எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.7.2024
விவரங்களுக்கு: rectt.bsf.gov.ina

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *