கிருட்டினகிரி, ஜூன் 5– கிருட்டினகிரி தேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மனிதநேய இயக்க நிறுவனத்தலைவர் மா. திருப்பதி அவர்களின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 02/06/2024-ஞாயிற்றுக்கிழமை கிருட்டினகிரி டி.எஸ்.ஆர் விடுதியில் கிருட்டினகிரி கட்டிகானப்பள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பெருமாள் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத்தலைவர் கோ.திராவிடமணி கலந்துகொண்டு பெரியார் மக்களின் மூச்சுகாற்று என்ற நூலை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் மகிழ்வாக விடுதலைக்கு ஒரு ஆண்டு சந்தாவை மாவட்டத்தலைவர் கோ. திராவிடமணியிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் சி.சீனி வாசன், ஒன்றியத் தலைவர் த.மாது, நகரச் செயலாளர் அ.கோ.இராசா, மாவட்ட ப.க.தலைவர் சா.கிருட்டினன், ப.க.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். 65-வது ஆண்டு பிறந்தநாள் காணும் விடுதலை வாசகர் திருப்பதி ஏழை எளிய மக்களுக்கு ரூ 45,000/- மதிப்பில் இலவசமாக வேட்டி மற்றும் சேலைகள் 300 நபர்களுக்கு வழங்கினார். 02/06/2024.
பிறந்தநாள் மகிழ்வாக ‘விடுதலை’ சந்தா
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:விடுதலை சந்தா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
