காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை

1 Min Read

காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி கழக மாவட்ட ப.க. தலைவர் ப.சுந்தரம் கடந்த 28.5.2024 அன்று மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் 29.5.2024 அன்று இல்லத்தில் நடைபெற்றது.
காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை, அண்ணா தமிழ்க் கழக செயலாளர் அ.கதிர்வேல் ஆகியோர் இரங்கலை தெரிவித்தனர்.
மறைந்த ப.சுந்தரம் எழுதி வைத்திருந்த மரண சாசனத்தை கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா வாசித்தும் இரங்கலும் தெரிவித்தும் பேசினார்‌‌.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.இரவி, நா.குணசேகரன், பா. கணேசன், சி.செல்வமணி, கொ.மணிவண்ணன், இ.ப.பழனிவேலு, தி.செயலெட்சுமி, மு.சு.கண்மணி, எஸ்.முழுமதி, கொரட்டி வீ.பாலு, சேகர், ஆ.பாலகிருட்டிணன், ஜோசப், வீ.முருகப்பன், திருச்சி நடராஜன், சுப.பரமசிவம், மூ.வெங்க டேசன், துரை.செல்வம், பொன்.துரை உள்ளிட்ட கழகத் தோழர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செய்தனர்.
மறைந்த ப.சுந்தரத்தின் உடல் எந்தவித மூட சடங்குகளும் இன்றி சுயமரியாதை கொள்கைப்படி எரியூட்டப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *