கழகத் தலைவர் தொலைபேசியில் இரங்கல்
தஞ்சை வல்லம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் கே.ஜி.பொன்னுசாமி அவர்களின் வாழ்விணையர் செல்லம்மாள் (84) நேற்று (02-06-2024) மறைவுற்றார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று தொலைபேசி வாயிலாக கே.ஜி.பொன்னுசாமி அவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று இறுதி மரியாதை செலுத்தினார். வல்லம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது
தஞ்சை வல்லம் கே.ஜி.பொன்னுசாமி வாழ்விணையர் மறைவு
Leave a comment