செந்துறை – குழுமூர் “நீட் எதிர்ப்பு போராளி” மறைந்த அனிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அனிதாவின் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில், 1.9.2023 காலை 9.00 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், சு.மணிவண்ணன் (காப்பாளர்), பொன் செந்தில்குமார் (மாவட்ட துணை செயலாளர்), செந்துறை. மதியழகன் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்) ஒருங்கிணைப்பில் வெ. இளவரசன் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்), இராசா.செல்வகுமார் (செந்துறை ஒன்றிய செயலாளர்), சோ.க.சேகர் (செந்துறை ஒன்றிய அமைப்பாளர்), ஆகியோர் பங்கேற்றனர், அனிதாவின் தந்தை டி.சண்முகம், சகோதரர் அனிதா மணிரத்தினம், ஆகியோர் உடனிருந்தனர்.