பெரியார் பெருந்தொண்டர் பெரியகோட்டை மா.சந்திரன் மறைவு

1 Min Read

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

திராவிடர் கழகம்

சிவகங்கை, நவ.19– பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை மா.சந்திரன் (வயது 75) அவர்கள் மறைவுக்கு சிவகங்கை,  காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரி யாதை செலுத்தப்பட்டது.

அவரது வாழ்விணையர் செல் லம்,  மகன்கள் ச.அமுதன், 

ச.மாணிக்கவாசகன், மகள்கள் 

ச.ராஜலட்சுமி இளமுருகு பொற் செல்வி, ச.கண்ணகி ரமேஷ் ஆகி யோரிடம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கழகத் தோழர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் மீது கழகக் கொடி போர்த்தப்பட்டு இரங்கல் உரையோடு நிறைவு பெற்றது.

நிகழ்வில் கழக காப்பாளர்கள் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி, சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புக ழேந்தி, காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, காரைக் குடி மாவட்டச் செயலாளர் 

சி.செல்வமணி, சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் 

ச.அனந்தவேல், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் வீ.ர.ஜெயராமன், மாணவர் கழக தோழர் பிரவீன் முத்துவேல், வ.உ.சி. ஆய்வு வட்ட பொறுப் பாளர் குருசாமி மயில்வாகனன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *