ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வலைப்பந்துபோட்டியில் வெற்றி

1 Min Read

அரசியல்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வலைப்பந்து போட்டி மேலணி குழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 22.08.2023 அன்று நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி வீரர்கள் கலந்து கொண்டு 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் அட்சயா, சுருதி-19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் இரட்டையர் பிரிவில் அருண் தேவன் மற்றும் சூர்யா ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். 

மேலும் 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சங்கீதா, மதிமலர், விஷ்வா, பிரதீப் -17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் பிரதீப் குமார் ,19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் பிரியதர்சினி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *