காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து: மக்களவை செயலகம் அறிவிப்பு

1 Min Read

புதுடில்லி, செப். 1– நாடாளுமன்ற மழைக்கால கூட் டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்தது. 

மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை முன்வைத்து இந்த தொடரில் எதிர்க் கட்சிகள் புயலை கிளப்பி இருந்தன. இந்த தொட ரின் நிறைவு நாளான கடந்த 11ஆம் தேதி மக்க ளவையில் அமளியில் ஈடு பட்டு அவை நடவடிக்கை களுக்கு குந்தகம் விளை வித்ததாக கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். அவரது நட வடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புரி மைக்குழு விசாரித்தது. நாடாளுமன்ற சிறப்புரி மைக்குழு முன்பு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அண்மை யில் ஆஜரானார். அப்போது அவர், மக்களவையில் தனது ஒழுங்கீன செயல் பாடுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குழுவில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. இதை ஏற்று அவரது இடைநீக்கம் ரத்து செய் யப்பட்டது. அவரது தகுதி நீக்க நடவடிக்கை 30.8.2023 அன்று முதல் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *