“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”க்காக ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்கு

Viduthalai
2 Min Read

அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

அரசியல்

சென்னை, செப். 1– கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பய னாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், அருகில் உள்ள அஞ்சலகங்கள், அஞ்சல்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனா ளிகளுக்கு ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்ப தால், தகுதியுள்ள பயனா ளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், அஞ்சல் காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம். 

மேலும், அஞ்சல்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங் கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையா ளர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன் படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இந்தக் கணக்குக்கு இருப்பு தொகை (Zero Balance Account) எதுவும் கிடையாது .

தகுதியுள்ள பயனாளி கள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களி லும், DOOR  STEP   BANKING  என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும் தங்கள் இல்லங்களிலேயே அஞ்சல்காரர் மூலம் பெற் றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டப் பயனாளிகள், பிரதமரின் கிசான் திட்டப் பயனாளி கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *