பணம்-லாபம் நோக்கமில்லா ஏடு! முத்தமிழறிஞர் கலைஞர்

1 Min Read

கட்டுரை

நான் இந்த மாமன்றத்திலே காணுகின்றேன். நண்பர் மாதவனிடத்திலே பேசிக்கொண்டிருக்கும் போதுகூடச் சொன்னேன். எந்தெந்த இடங்களில் – எந்தெந்த உருவங்களில் பெரியார் இங்கு அமர்ந்திருக்கின்றார் என்பதை மன்றத்தில் என் விழிகளை மேயவிட்டுப் பார்த்ததில் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி பெரியார் வியாபித்திருக்கிறார். எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறார். அந்தப் பெருமகன் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும், கருத்துகள் பரவிட வேண்டும். என்று நினைக்கிறார் என்றால், ‘‘பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற லாப நோக்கத்தோடு அல்ல; என்னுடைய பத்திரிகை அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வேண்டும் என்பதல்ல.

அது போய்ச்சேர வேண்டிய இடத்திலே, அதிலே சொல்லப்படுகிற கருத்துகள் போய்ச்சேர்ந்தால் போதும்’’ என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்கள்.
அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ‘விடுதலை’யிலே வருகிற கருத்துகள் போய்ச்சேர வேண்டிய இடத்திலே போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. அதை யாரும் மறுப்பதற்கில்லை.”

‘விடுதலை’ அச்சகத்தில் புதிய அச்சு இயந்திரத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஆற்றிய உரையிலிருந்து… “விடுதலை” 4-11-1969

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *